கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

சென்னை: கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்றதாகக் கூறப்படும் 12 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றவர்களுக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!