TM Homepage
பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் தேர்தல் பிரசாரம் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போதையை மின்னிலக்க காலகட்டத்தில் கட்சிகள், தங்கள் பிரசாரத்துக்கு சமூக ஊடகங்களையே பெரிதும் நம்பியுள்ளன.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.
தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுதியின் நடப்பு உறுப்பினராக உள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். அவர் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க விரும்புவதாகவும் இதற்காக பாஜக தலைமையுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவரைவிட பாஜக மேலிடத்துடன் தினகரன் தரப்புக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும் தேனியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை ஊழியர்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியில் தடைகள் நீடிக்கின்றன.
தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார்.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
‘கங்குவா’ குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு
இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு மார்ச் 19ஆம் தேதி (இன்று) வெளியாகிறது.
என்னை நன்றாக அடிக்க வேண்டும் என்றேன்: பவ்யா
‘இடி, மின்னல், காதல்’ என்ற மாறுபட்ட தலைப்பில் உருவான படத்தில் நடித்து முடித்துள்ளார் இளம் நாயகி பவ்யா திரிகா.
என் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை: ஆண்ட்ரியா
கடைசிவரை தனித்து வாழ்வதற்கு இப்போதே தயாராகி வருவதாகச் சொல்கிறார் நடிகை ஆண்டிரியா.