இளையர் முரசு

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அஷ்வீன் சிவசங்கரன், 19, சிறப்புத் தேர்ச்சிகளுடன் 3.95 ‘ஜிபிஏ’ பெற்றுச் சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்றுள்ளார்.  
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார். இத்தகைய தலைமைத்துவ மாற்றம் நாட்டுக்கும் மக்களுக்கும் முக்கியமான ஒன்று. மேலுமோர் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளையர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியது இவ்வார இளையர் முரசு.
சிங்கப்பூர் தேசிய தொடக்கக் கல்லூரி 48ஆம் ஆண்டாக நடத்திவரும் விவாதப் போட்டியில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது. 
கலை நயமும் கதை வளமும் ஒருசேர ‘நெசவு’ எனும் நாட்டிய நாடகத்தை தத்வா கலைக் குழுவினர் அரங்கேற்றினர். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக அலிவால் கலை மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.