தமிழ்நாடு

சென்னை: தென் தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க முடிவாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துக்கும் (இஸ்ரோ) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கும் (டிட்கோ) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை: தமிழகத்தில் பதிவாகும் சிறுமிகள் தொடர்பான கடத்தல் வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை மனநிறைவு அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
தென்காசி: கனமழை காரணமாக பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, சுதாரித்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சென்னை: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ள மாணவ, மாணவி யர்க்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.