மூத்த செய்தியாளர் சண்முகநாதன் காலமானார்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் சண்முகநாதன் காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த சண்முகநாதன், சிறு வயது முதலே எழுத்தாளராக, செய்தியாளராக பணியாற்ற வேண்டும் என்ற கனவைக் கொண்டு இருந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய அவர், ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெண்ணிலா என்ற பல்சுவை இதழை வெளியிட்டார்.

கடந்த 1953ஆம் ஆண்டு தினத்தந்தி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த சண்முகநாதன் சுமார் 70 ஆண்டுகள் அப்பத்திரிகையில் பணியாற்றினார். செய்தி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய அவர், சமகால வரலாற்றை தொகுத்து அளிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவர்கள்’ என்ற அவரது நூல் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ‘ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’, ‘கற்காலம் முதல் கம்ப்யூட்டர் வரை’ என்பன உள்ளிட்ட மேலும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சண்முகநாதன்.

கடந்த 2022ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதை இவருக்கு அளித்து சிறப்பு செய்தது தமிழக அரசு. சண்முகநாதன் தனது 93வது வயதில் வயது மூப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!