கூட்டுரிமைக் கட்டட கார் நிறுத்துமிடத்தில் முழங்கால் அளவுக்குத் தேங்கிய நீர்

புக்கிட் தீமாவில் உள்ள ‘தி துவின்ஸ்’ கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை (மே 4) நீர்க்குழாய் ஒன்று பழுதடைந்ததால் அங்குள்ள அடித்தள கார் நிறுத்துமிடத்தில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது.

வெள்ளக்காடாகக் காட்சியளித்த அந்த கார் நிறுத்துமிடத்தில் குடியிருப்பாளர் ஒருவர் நடந்துசெல்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு குடியிருப்பாளர், ஏறக்குறைய 20 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

எண் 6 பால்மோரல் கிரசென்டில் இச்சம்பவம் குறித்து காலை 7.55 மணிக்குத் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடனும் கட்டட நிர்வாக முகவருடனும் சேர்ந்து செயல்பட்டு கார் நிறுத்துமிடத்தில் இருந்து நீரை வெளியேற்றியதாக அது கூறியது.

கீழ்த்தளத்தின் சேமிப்புத் தொட்டியில் நீர்க்குழாய் பழுதடைந்ததால் நீர் வெளியேறி, கார் நிறுத்துமிடத்தில் வெள்ளம் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கழகம் சொன்னது.

“இந்தத் தனிப்பட்ட சம்பவம் மழையால் ஏற்படவில்லை. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அப்பகுதியில் மழை கடுமையாக இல்லை. அருகிலிருந்த வடிகால்களில் மழைநீர் நிரம்பவும் இல்லை,” என்று அது விவரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!