தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 8பாயிண்ட் என்டர்டைன்மெண்ட், D3 டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அன்னையர் மூவருக்கு அன்னையர் திலகம் விருதுடன் பரிசும் சான்றிதழ்களும் பற்றுச்சீட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி, மே மாதம் 11ஆம் தேதி மாலை 6 மணியளவில் 1 ஃபேரர் பார்க் ஸ்டேஷன் ரோட்டின் 6ஆம் தளத்தில் இருக்கும் கிராண்ட் பால் ரூமில் நடைபெறவிருக்கிறது.
திரைப்பட நடிகை கோவை சரளா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். ச. வடிவழகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
எண்சுவை உணவு, ஆடல், பாடல் அம்சங்களுடன் அதிர்ஷ்டக் குலுக்கும் இடம்பெறும்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 98552961 என்ற தொலைபேசி எண்ணில் அருமைச்சந்திரனைத் தொடர்புகொண்டு நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்