ஆளுநர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க காவல்துறை சிறப்புக் குழு

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆளுநர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் எட்டு உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், விசாரணைக்கு உதவும் வகையில் ஆளுநர் மாளிகையில் உள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளையும் காவல்துறை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிலரிடம் விசாரணை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமையன்று (மே 3) காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றதாகச் சொல்லப்பட்டது.

முன்னதாக, தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த ஆளுநர் போஸ், அது அரசியல் சதி என்றும் அதன்மூலம் ஊழல், வன்முறையை வெளிப்படுத்தும் தனது முயற்சிகளைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!