அனுஷா செல்வமணி

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக அதிபர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட திரு லாரன்ஸ் வோங், பதவியேற்பு சடங்கு முடிந்த பின்னர் தமது தொகுதி மக்களைச் சந்தித்தார்.
விளையாட்டோடு பின்னிப் பிணைந்தக் குடும்பம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்ட அனுபவங்கள். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாலும் அவர் உடலில் ஓடுவது ஒரு விளையாட்டு வீராங்கனையின் ரத்தம்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் இந்திய நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரலில் ஏற்பாடு செய்திருந்தன.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
உள்ளூர் இலக்கியம், மெய்ம்மை ஆகியவற்றை ஒட்டித் தயாரிக்கப்பட்ட ஐந்து உள்ளூர் குறும்படங்களைக் காட்சிப்படுத்தி, அதில் ஈடுபட்ட இளையர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் மேடைக்கலை (சிட்ஃபி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அட்சய திருதியை நாளில், வாடிக்கையாளர்கள் பலர் நகைக் கடைகளுக்குச் சென்று தள்ளுபடி விலையில் நகை வாங்க முற்படுவது வழக்கம்.
சிங்கப்பூரில் இயங்கிவரும் நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பூரில் சுற்றுப்புறத் தீர்வுகள் வழங்கும் முதல் உற்பத்தி ஆலையான கிரீன் லேப் நிறுவனமும் நிஞ்சா வேன் தளவாட நிறுவனமும் கைகோத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்பதற்கான புதுமையான வழிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த உயிரோவியரான ஜெகன்நாத் ராமானுஜம், 36.
அட்சய திருதியையை முன்னிட்டு, எண் 85 சிராங்கூன் சாலையில் உள்ள ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையில் வைர, தங்க நகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.